பாலியஸ்டர் தேசிய கொடிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு| Dinamalar

புதுடில்லி : ‘பாலியஸ்டர்’ மற்றும் இயந்திரத்தில் தைக்கப்பட்ட தேசிய கொடிகளுக்கும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை பறக்க விட மத்திய அரசு அறிவுறுத்தியது. பருத்தி, பட்டு, கம்பளி மற்றும் காதி துணிகளில் நெய்யப்பட்ட தேசிய கொடிக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பாலியஸ்டர் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் தயாரிக்கப்படும் மூவர்ண கொடிக்கும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளித்த மத்திய நிதி அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.