மேகவெடிப்பால் பலத்த மழை வெள்ளத்தில் 10 பக்தர்கள் பலி: அமர்நாத் யாத்திரையில் பரிதாபம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகை அடிவாரத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் 3 பெண்கள் உள்பட 10 பக்தர்கள் பலியாகினர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது. 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் இதுவரையில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.இந்நிலையில், அமர்நாத் பனிக்குகை பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்டு 3 பெண்கள் உள்பட 10 பக்தர்கள் பலியாகினர். அங்கு பக்தர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த 25 கூடாரங்கள், 3 சமூக உணவு கூடங்கள் போன்றவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அப்பகுதியில் தங்கியிருந்த பக்தர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்தோ-திபெத் எல்லை படை, ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், ஆளுநர் மனோஜ் சின்காவை தொடர்பு கொண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்து, வேண்டிய உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.