பாலியல் வழக்கில் கைதான ஜார்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

ராஞ்சி: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிமல், குந்தி மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சையத் ரியாஸ் அகமது. வெளிமாநிலத்தை சேர்ந்த 8 பொறியியல் மாணவ, மாணவிகள் பயிற்சிக்காக இந்த மாநிலத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் அரசு துணை மேம்பாட்டு ஆணையர் குடியிருப்பில் தங்கினர். இரவில் ஒரு மாணவி தனியாக இருந்தபோது, இந்த துறையின் ஐஏஎஸ் அதிகாரியான சையத் ரியாஸ் அகமது அங்கு சென்று, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் முகமது கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டார். அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உத்தரவுப்படி, நேற்று இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.