ஷின்சோ அபே மறைவு: இந்தியா ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரின் மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஷின்சோ அபேவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. இன்று ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படுவதால், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.