இனிப்பகத்தில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.1.25 லட்சம் சில்லறை நாணயங்கள் கொள்ளை

வேலூர் மாவட்டம் வேலப்பாடி ஆரணி சாலையில் உள்ள இனிப்பகத்தில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சில்லறை நாணயங்களை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கடைக்குள் விலை உயர்ந்த பொருட்கள் ஏதுமில்லாததால், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு 14 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 1 ரூபாய், 2 ரூபாய் சில்லறை நாணயங்களை திருடிச்சென்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.