இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராகிறார்? | Dinamalar

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா தற்காலிக அதிபராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோத்தபயா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்தன. கோத்தபயா அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து தப்பிசென்றார். பின்னர், அதிபர் மாளிகை போராட்டக்காரர்கள் பிடியில் வந்தது.

தொடர்ந்து, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டும்படி இலங்கை சபாநாயகர் மகிந்த அபேவர்தனாவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கோத்தபயா, பிரதமர் ரணிலிடம் உறுதியளித்ததாக தகவல் வெளியானது. அதேநேரத்தில், ரணில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய சஜித் பிரேமதாசா, இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோத்தபயாவும், ரணிலும் பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்தனர். அதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும், இலங்கை பார்லிமென்ட் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனாவை இடைக்கால அதிபராக பதவியேற்கும்படி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. சுயாதீன கட்சி தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்பார் எனவும் தெரியவந்துள்ளது.

பிரதமர் வீடு முற்றுகை

கோத்தபயா மாளிகையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் வீட்டிற்குள்ளும் புகுந்தனர். ரணில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.