சேலம்.! இளைஞர் விஷம் குடித்து தற்கொலை.!

சேலம் மாவட்டத்தில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை சிங்களந்தா பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 24). இவர் சரியாக வேலைக்கு போகாமல் மது அருந்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனைப் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.