வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கொள்ளை| Dinamalar

அப்பிகரே : வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு, ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றனர்.பெங்களூரின், அப்பிகரேவில் ரிஹான் என்பவர், 55, வசிக்கிறார். இவரது குடும்பத்தினர், காலை பணிக்கு சென்றால், இரவு 10:00 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.நேற்று முன் தினம் காலை, அனைவரும் பணிக்கு சென்றதால், ரிஹான் தனியாக இருந்தார்.

இரவு 8:00 மணியளவில், வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், கத்தியை காண்பித்து மிரட்டி, கயிற்றால் கட்டி போட்டனர். ரிஹான் அணிந்திருந்த தங்கச்செயின், கம்மல், வளையல் உட்பட, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியோடினர்.இரவு 10:00 மணிக்கு, மகன் வீடு திரும்பிய போது, நடந்தது தெரிந்தது. தாயுடன் கங்கம்மனகுடி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். போலீசாரும் விசாரணையை துவங்கியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.