தென்மேற்குப் பருவமழை தீவிரம் : தெலுங்கானாவில் அதிகன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!

தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்திருக்கிறது.

ஹைதராபாத், நிஜாமாபாத், நிர்மல், அதிலாபாத் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.