கணவருடன் பிரிவு ஏன்? பர்சனல் சோகத்தை முதல் முறையாக பகிர்ந்த இசைவாணி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இசைவாணி தற்போது தனது திருமண வாழக்கை முறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதில் பங்கேற்கும் பலரும் திரைத்துரையில் வாய்ப்புகளை பெற்று வருகின்றன

இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியில் விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 5-வது சீசனில் பங்கேற்று புகழ்பெற்றவர் இசைவாணி. நாட்டுப்புற பாடகியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும்போதே பாடல் பாடி தொகுப்பாளர் கமல்ஹாசனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

தொடர்ந்து 49 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடித்த அவர் அதன்பிறகு எலிமினேட ஆகிவிட்டார். முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இசைவாணி பாதியிலேயே வெளியேறிய நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குடும்பம் ஏழ்மை நிலை உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ஆனால் அப்போது அவர் தனது திருமணம் குறித்து எவ்வித தகவலும் கூறாதது பலரையம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகு இத்தனை மாதங்கள் கடந்துள்ள நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசைவாணி தனது திருமணம் மற்றும் கணவர் வீட்டில் இருந்து வந்துவிட்டது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் கூட பெற்றார் வீட்டில் கானா பாடல்கள் பாட இருந்த சுதந்திரம் கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. அதனால் தான் அங்கிருந்து வந்துவிட்டேன். என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது தனக்கு வேறு திருமணம் நடந்துவிட்டது என்றும் இப்போது முன்னாள் கணவரின் குடும்பத்துடன் தொடர்பில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.