தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
image
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (12ஆம் தேதி) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 12ஆம் தேதி லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Rain Images | Free Vectors, Stock Photos & PSD
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 செ.மீ, அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.