இலங்கை ஜனாதிபதி மாளிகை கழிவறையை பார்த்து ஆச்சரியமடைந்த போராட்டக்காரர்கள்! காரணம் இதுதான்


ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் கண்ட காட்சிகள் பல அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வசித்து வந்த மாளிகையில் போராட்டக்காரர்கள் புகுந்தனர்.
அந்த மாளிகையை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் இரவை அங்கே கழித்தனர்.

போராட்டக்காரர்கள் பலரும் மாளிகையின் ஒவ்வொரு அறையாக சென்றனர். அங்குள்ள சமையலறைக்கு சென்ற குழுவினர் அங்கு முன்தினம் சமைக்கப்பட்டு மீதமிருந்த உணவு வகைகளை சாப்பிட்டனர்.

இலங்கை ஜனாதிபதி மாளிகை கழிவறையை பார்த்து ஆச்சரியமடைந்த போராட்டக்காரர்கள்! காரணம் இதுதான் | Sri Lanka President Palace People

bbc tamil

வேறு சிலரோ, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கழிவறையை பார்வையிட்டனர். அந்த அறையும் குளிர்சாதன வசதியுடன் இருந்ததைப் பார்த்த போராட்டக்காரர்கள் ஆச்சரியத்தில் அதனுள்ளே சென்று பார்ததனர்.

சிலர் கழிவறைக்குள் சிறுநீர் கழித்து விட்டு வந்தனர். அருகே இருந்த குளியலறையே மிகப்பெரிய அறை போல இருந்ததை பார்த்து மக்கள் வியந்தனர்.

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மிகப்பெரிய அறையில் உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. அந்த அறைக்குள் சென்ற சிலர், அங்கிருந்த கருவிகளை இயக்கி உடற்பயிற்சி செய்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.