மனைவியிடம் பொய் சொல்லி தோழியை பார்க்க வெளிநாடு சென்று திரும்பியவர் கைது

தோழியை பார்க்க வெளிநாடு சென்றதை மனைவியிடம் இருந்து மறைக்க, பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த நபரை மும்பை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

திருமண பந்தத்தை மீறி, தனது தோழியுடன் பழகி வந்த நபர், அவரை பார்ப்பதற்காக வெளிநாடு சென்று மும்பை திரும்பியுள்ளார்.

அதிகாரிகள் சோதனையின் போது, பாஸ்போர்ட்டில் அவரது பயண விவரங்கள் குறித்த பக்கங்கள் கிழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியதில், மனைவியிடம் அலுவல் வேலைக்காக வெளியில் செல்வதாக கூறி, தோழியை பார்க்க சென்றதாகவும், மனைவி கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.