குடும்ப தகராறில் தந்தையை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம், பானிபட், ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்தவர் மங்கத் ராம். இவருக்கு பிரேம் என்ற மகன் இருக்கிறார். பிரேமிற்கும் அவரது தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று இருவருக்கும் இடையில் சம்பவதன்று இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் தந்தையை அங்கிருந்த கட்டையால் தாக்கியுள்ளார். அவரை தடுக்க முயன்ற தாயையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், மங்கத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலரிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பிரேமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது