இலங்கையின் சிங்கள பெளத்த பேரினவாத பாசிஸ்டுகளை அந்த நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ளனர் என தமிழ்நாட்டை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் காலிமுகத் திடலில் ஜூலை 9ம் திகதியான சனிக்கிழமை காலை தொடங்கிய மக்கள் போராட்டம், ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு அதனை ஆக்கிரமிக்கும் அளவிற்கு பெரிதானது.
ஒரே இனம் ஒரே மதம்
ஒரே கலாச்சாரம் ஒரேதேசம் எனும்
இனவாதம் இனவெறுப்பாகி இனவெறுப்பு இனவெறியாகி இனவெறி இனக்கொலையாகி
இனக்கொலை ஃபாசிசமாகி
ஃபாசிசம் புறப்பட்ட புள்ளிக்கே
பூகம்பமாகத் திரும்பி
சிங்கள பௌத்த பேரினவாத
ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கிறது.
சங்பரிவார்களுக்கும்
இது ஒரு எச்சரிக்கை. pic.twitter.com/dAHtNRtSk2— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 10, 2022
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் போராட்டகாரர்கள் முற்றுகையிட்டு தீவைத்து கொளுத்தினர்.
அத்துடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் பதவி விலகும் வரை இந்த போராட்டமானது தொடரும் எனவும் போராட்டகாரர்கள் அறிவித்தனர்.
இந்தநிலையில், இலங்கையில் உள்ள மக்கள் போராட்டம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்தில், இலங்கையில் நடைபெற்று வந்த சிங்கள பெளத்த பேரினவாத பாசிஸ்டுகளின் ஆட்சி தற்போது விரட்டியடிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாரம் ஆயுதம்
ஆதிக்கம் ஆணவம்
அனைத்தையும்
அடித்து நொறுக்கிஅரண்மனையை
அள்ளிவிழுங்கும் ஆவேசத்துடன் ஆர்த்தெழுந்து
சீறிப்பாயும் சிங்களச் சுனாமி!மக்கள் சக்தி-
பீடத்திலும் அமரவைக்கும்!
பீடையெனவும் வீசியடிக்கும்!பல்லக்கையும்
தூக்கிச் சுமக்கும்!
பாடையையும்
கட்டித் தூக்கும்! pic.twitter.com/TOD1PB9NoB— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 10, 2022
இதுத் தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில் “ ஒரே இனம் ஒரே மதம்
ஒரே கலாச்சாரம் ஒரேதேசம் எனும்
இனவாதம் இனவெறுப்பாகி இனவெறுப்பு இனவெறியாகி இனவெறி இனக்கொலையாகி
இனக்கொலை ஃபாசிசமாகி
ஃபாசிசம் புறப்பட்ட புள்ளிக்கே
பூகம்பமாகத் திரும்பி
சிங்கள பௌத்த பேரினவாத
ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கிறது. சங்பரிவார்களுக்கும்
இது ஒரு எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கையில் தனியாக சிக்கிய ஆர்பாட்டக்காரர்கள்., கொடூரமாக தாக்கிய பாதுகாப்பு படையினர்.. பரபரப்பு காட்சி
மேலும் அவர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், “அதிகாரம் ஆயுதம்
ஆதிக்கம் ஆணவம்
அனைத்தையும்
அடித்து நொறுக்கி
அரண்மனையை
அள்ளிவிழுங்கும் ஆவேசத்துடன் ஆர்த்தெழுந்து
சீறிப்பாயும் சிங்களச் சுனாமி!
மக்கள் சக்தி-
பீடத்திலும் அமரவைக்கும்!
பீடையெனவும் வீசியடிக்கும்!
பல்லக்கையும்
தூக்கிச் சுமக்கும்!
பாடையையும்
கட்டித் தூக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.