இன்று வானகரம் வழியாக செல்வதை தவிர்க்கவும்… சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாரு வெக்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக பொதுகுழு கூட்டம் கூட இருக்கிறது.

இதன் காரணமாக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்றாற் போல் மாற்றி அமைத்துக்கொள்ள போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்றே சென்னையில் குவிய ஆரம்பித்துள்ளதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.