மராட்டியத்தில் தொடர் மழை 76 பேர் உயிரிழப்பு

இந்திய மாநிலமான மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஜூன் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழைக்காலம் தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13 திகதி வரை மழை பெய்யும் என வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.இதையடுத்து மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் அமர்த்தப்பட்டுளளனர். இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் மழைக்கு 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.