பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் அபேஸ்| Dinamalar

குமாரசாமி லே — அவுட் : மின் கட்டணம் செலுத்தும்படி கூறிய, சைபர் மோசடி நபர்கள், பெண் டாக்டரிடம் 10.76 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தனர்.பெங்களூரின், குமாரசாமி லே — அவுட்டில் வசிப்பவர் டாக்டர் வாணி பிரபாகர். ஜூலை 7ல், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து, குறுந்தகவல் வந்தது.

இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அதில் பேசிய நபர், மின் கட்டணம் செலுத்த ‘டீம் விவர்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கூறினார்.இதன்படி வாணி, பதிவிறக்கம் செய்து கொண்டார். செயலி வழியாக 100 ரூபாய் செலுத்தினார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கிலிருந்த, 10.76 லட்சம் ரூபாய், வேறு கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக, மொபைலுக்கு தகவல் வந்தது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தெற்கு மண்டலத்தின், சைபர் கிரைம் புகார் செய்துள்ளார். அவர்கள் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.