3டி வடிவில் விரைவில் வெளியாகும் ஆளவந்தான்?

கடந்த, 1984ல், கமல் எழுதிய, தாயம் என்ற கதையை மையமாக வைத்து ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கினார் கமல்ஹாசன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்திலும் மிரட்டியிருப்பார் கமல். இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா என்றாலும், கமலின், டச்தான் படம் முழுதும் இருக்கும்.

தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற, 2டி அனிமேஷன் காட்சிகள், பெரும் பாராட்டுக்களை பெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் 3டி முறையில் புதிய வடிவில் ஆளவந்தான் படத்தை கலைப்புலி தாணு விரைவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.