மதுபான விடுதியில் 15 பேர் சுட்டுக் கொலை| Dinamalar

ஜோஹன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவில், மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 15 பேர் உயிரிழந்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில், சோவெட்டோ பகுதியில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துஉள்ளது. இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சோவெட்டோவில் இயங்கும் மதுபான விடுதிக்கு, ஒரு ‘மினி பஸ்’சில் வந்த சிலர், திடீரென சரமாரியாக சுட்டனர். இதில், மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், பணியாட்கள் உள்ளிட்டோர் குண்டு பாய்ந்து பலியாகினர்.

இரவு நேரம் என்பதாலும், மங்கிய ஒளியில் விடுதி செயல்பட்டதாலும், பலர் தப்பிக்க வழி தெரியாமல் குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த பலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், இரு வாரங்களுக்கு முன், மதுபான விடுதியில், 21 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். அவர்கள் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் மற்றொரு கோர சம்பவம் நடந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.