மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன் பறக்கத் தடை

சென்னை:
மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதில் 188 நாடுகள் பங்கேற்க இருப்பது தற்போது உறுதி ஆகி உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்த மொத்தம் 343 அணிகள் அதிகாரப்பூர்வ போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளன. இது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரம் உலக நாடுகளில் இருந்து வரும் வீரர்களை கவரும் வகையில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.