ஆண்டிபட்டி அருகே கோயில் மண்டபத்தை கையகப்படுத்திய அறநிலையத் துறை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்ட பத்தை கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்காக அறநிலையத்துறை செயல் அலுவலர் நரசிம்மன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று கோயிலுக்கு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அறநிலை யத்துறையினர் மண்டபத்தை கையகப்படுத்தி சீல் வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.