எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை 2 ஆக குறைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.!

தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில், சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை இரண்டாக குறைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளும், ஏசி 3 டயர் பெட்டிகள் ஆறும், ஏசி 2 டயர் பெட்டிகள் இரண்டும், முன்பதிவில்லாத பெட்டிகள் ஐந்தும் இயக்கப்படுகின்றன. புதிய உத்தரவின்படி, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் இரண்டாக குறைக்கப்பட்டு, ஏசி 3 டயர் பெட்டிகள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏசி 2 டயர் பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில்லா பெட்டிகள் மூன்றாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஏசி பர்ஸ்ட் கிளாஸ் பெட்டி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ரயில்வே போர்டின் இந்த உத்தரவால் எக்ஸ்பிரஸ் ரயில்களின் தற்போதுள்ள சாதாரண படுக்கைகளின் எண்ணிக்கை 780லிருந்து 156 ஆக குறைகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.