லண்டன் பேருந்தில் 16 வயது டீன் ஏஜ் பெண்ணுக்கு நேர்ந்த மோசமான சம்பவம் தொடர்பிலான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
ஹவுன்ஸ்லோவில் தான் இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடந்துள்ளது.
அன்றைய தினம் மாலை 4 மணியளவில் 16 வயது டீன் ஏஜ் பெண் பேருந்தில் ஏறினார்.
பின்னர் அதே பேருந்தில் ஏறிய நபர் ஒருவர் அந்த பெண்ணின் அருகே உட்கார்ந்தார்.
ஒரு கட்டத்தில் அப்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்தும் பொலிசார் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
Met Police
அதில் உள்ள நபரிடம் பேசுவதற்கு பொலிசார் அவரை தேடுகின்றனர்.
அவரை பற்றி தெரிந்தவர்கள் அல்லது எங்கே இருக்கிறார் என்று அறிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.