இணைவேந்தரான தம்மை கலந்து ஆலோசிக்காமல் அழைப்பிதழ் அச்சடித்ததாகக்கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பை விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், மரபின்படி ஆளுநரின் பெயருக்கு அடுத்தபடியாக இணைவேந்தரான தமது பெயர் தான் இடம்பெற வேண்டும் என்றும் விழா அழைப்பிதழில் அவ்வாறு இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.