உக்ரைனின் மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி தொடர் தாக்குதல் – 12 பேர் காயம்!

உக்ரைனின் மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் ஏவுகணைகள் மூலம் நடத்திய தொடர் தாக்குதலில் அங்கிருந்த குடியிருப்புக் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்தது.

மைகோலைவ் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய படைகள் ஒரே நாளில் அடுத்தடுத்து 19 ஏவுகணைகளை ஏவி தொடர் தாக்குதல் நடத்தியதாக மைகோலைவ் மேயர் Oleksandr Senkevych தெரிவித்துள்ளார்.

இதில் 2 மருத்துவமனைகள், ஒரு பள்ளி மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.