அ.தி.மு.க. பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானத்தை அங்கீகரித்தது தொடர்பாக உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய மனுக்கள் தேர்தல் ஆணையத்திற்கு விரைவில் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள உறுப்பினர்களிடமும் மனுக்கள் பெற்று அந்தந்த மாநில செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்குவதாக கூறப்படுகிறது.
உறுப்பினர்களின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தெரிவிக்கும் வகையில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.