டோல்கேட் ஊழியர் கன்னம் ‘பழுத்தது’: கிரேட் காளி ஆக்ரோஷம்

சண்டிகர்: பஞ்சாப்பில் டோல்கேட் ஊழியர் கன்னத்தில் மல்யுத்த வீரர் காளி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தாலிப் சிங் ரானா எனப்படும், ‘கிரேட் காளி’ என்ற மல்யுத்த வீரர், பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து அரியானாவில் உள்ள கர்னாலுக்கு நேற்று காரில் சென்றார். அப்போது, லோதோவால் டோல்கேட்டில் காளியின் வாகனத்தை நிறுத்திய ஊழியர்கள், கட்டணம் கேட்டனர். அதற்கு அவர், ‘நான் பிரபல மல்யுத்த வீரர்’ என கூறியுள்ளார். அவர்கள் அவரது அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுள்ளனர். இது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், வம்பு செய்த ஊழியரின் கன்னத்தில் காளி ஓங்கி ஒரு அறைந்து விட்டதாக தெரிகின்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.