லாட்டரியில் முதல் பரிசு 25 கோடி – கேரள அரசின் பம்பர் ஆஃபர்

கேரளாவில் அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது. வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது . அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது.

ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல்கள் என விதவிதமான ஆஃபர்கள் உள்ளன. அதிகபட்ச தொகையாக முதல் பரிசு ரூ.12 கோடி கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டின் பரிசு தொகையை ரூ.25 கோடியாக உயர்த்த லாட்டரி இயக்குனரகம், கேரள அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதற்கு அரசும் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து வருகின்ற ஓணம் பம்பர் லாட்டரி சீட்டின் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு சீட்டு வருகிற 18-ந் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.