தாய் பலாத்காரம்: கொடூர மகன் கைது| Dinamalar

உத்தர கன்னடா : பெற்ற தாயை மகனே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம், உத்தர கன்னடா மாவட்டத்தின் தாண்டேலியில் நடந்தது.உத்தர கன்னடா மாவட்டம், தாண்டேலியைச் சேர்ந்தவர் ரோகி ஜான் புட்தோலி, 24; கூலி வேலை செய்து வருகிறார். தாண்டேலி வனப்பகுதியின் வனத்துறை மையத்தில் 52 வயது தாயுடன் வசிக்கிறார்.

தினமும் மது அருந்தி வீட்டுக்கு வருவார். இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இந்நிலையில், ஜூலை 8ம் தேதி இரவு மது அருந்தி வீட்டுக்கு வந்தார். இரவு உணவு சாப்பிட்டு விட்டு தாய் அருகில் படுத்து துாங்கினார். மறுநாள் அதிகாலை 5:00 மணியளவில் தாயை எழுப்பிய அவர், ஏதோ காண்பிக்க வேண்டும் என்று சோபா அருகில் அழைத்து சென்றுள்ளார்.

தன்னை பெற்ற தாய் என்றும் பாராமல், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மகனிடமிருந்து தப்பி, வீட்டின் வெளியில் மறைந்திருந்தார். மகன் வெளியே வந்து தேடும்போது, தாய் வீட்டிற்குள் சென்று பூட்டிகொண்டார். பின், தான் அவசரமாக எங்கோ செல்ல வேண்டும், கதவை திறக்கும்படி மகன் கூச்சலிட்டுள்ளார். இதனால் கதவை திறந்ததும், தாயை மீண்டும் கீழே தள்ளி இரண்டாவது முறையாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் மாலை தாண்டேலி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.