குப்பையில் கிடந்த தேசியக்கொடி: விசாரணை துவக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொச்சி : கேரளாவில் தேசியக் கொடி மற்றும் கடலோர காவல் படையின் கொடி ஆகியவை குப்பையில் கிடந்தது குறித்து விசாரணை துவங்கியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளத்திலிருக்கும் இரும்பனம் என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டுக்கு அருகில் குப்பைகள் குவிந்து கிடந்தன. அதில், நம் தேசியக் கொடி மற்றும் கடலோர காவல் படையின் கொடி ஆகியவையும் கிடந்தன. அந்த வழியாக சென்ற முன்னாள் ராணுவ வீரர் அந்தக் கொடியை எடுத்து அதற்குரிய மரியாதையை செலுத்தி உள்ளூர் போலீசிடம் ஒப்படைத்தார்.

latest tamil news
latest tamil news
latest tamil news

இதுகுறித்து, எர்ணாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல, கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளும் விசாரணையை துவக்கியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.