#திருச்சி || தனியார் பள்ளி வேன் மீது மோதிய கார்.. ஒருவர் பலி..!

தனியார் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூரில் தனியார் பள்ளியின் வேன் ஒன்று பெரம்பலூர்-துறையூர் சாலையில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாணவ-மாணவிகளை ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.  அப்போது,  அந்த சாலையில் வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. அதன் பின், அந்த காரின் பின்பக்கம் பள்ளி வேனின் இடது பக்கம் மோதி விபத்துக்கு உள்ளானது.

அப்போது அங்கிருந்த மின்கம்பம் வேன் மீது முறிந்து விழுந்தது. வேனில் பேட்டரி தூக்கி அடித்ததில் கீளினர் பச்சமுத்து படுகாயமடைந்தார். கார் ஓட்டுநர் இடிப்பாளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி பச்சமுத்து பரிதாபமாக பலியானார்.

ரவிசந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.