பூட்டிய வீட்டினுள் தாய் மகன் சடலம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

பூட்டிய வீட்டில் தாய் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், செங்கம்பட்டியை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன்.  இவரது இரண்டாவது மனைவி கமலா மற்றும் அவரது மகன் வீட்டில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் செந்தாமரை கண்ணனுக்கு மூன்று மனைவிகள் என்றும் இரண்டாவது மனைவிக்கு மூன்றாவது மனைவி சத்யாவிற்கு இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.  நேற்றிரவு இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால், அவர்கள் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.