தெலங்கானாவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு – ஜேசிபி இயந்திரத்தில் சிக்கிய இருவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்

தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. கோதாவரி நதி கரையோர கிராம மக்கள் மீட்கப்பட்டு முகாம்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் தெலங்கானாவின் மர்ரி பாடு என்ற கிராமத்தில் மூன்று மாத கைக்குழந்தையை, உறவினர்கள் கூடையில் வைத்து மீட்டு எடுத்து சென்றனர். அதேபோல், சோமனப்பள்ளி கிராமத்தில் ஜேசிபி வாகனத்தில் சிக்கிய இருவரை துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.