கிரீஸ் நாட்டில் தீயணைப்பு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது – 2 வீரர்கள் பலி

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் ஏஜியன் கடலில் அமைந்துள்ள சமோஸ் தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில் சமோஸ் தீவின் தீயணைப்புத்துறைக்கு சொந்தமான எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர் ஒன்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் 4 வீரர்கள் இருந்தனர். அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது.

இதைத் தொடர்ந்து மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் ருமேனியாவை சேர்ந்த ஒருவர், கிரீஸ் நாட்டுக்காரர் ஒருவர் என 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மால்டோவா நாட்டை சேர்ந்த 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.