சோகத்தில் மக்கள்.. வீட்டின் முன்பு கட்டிப்பிடித்தவாறு தாய், தந்தை, பிள்ளைகள் பலி !!

ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தைகள் என 4 பேர் கட்டிப்பிடித்தவாறு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியில் அகமது – பர்வீன் தம்பதி வசித்து வந்தனர்.  இவர்களுக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர். 

இந்நிலையில் பர்வீன் தங்களது குடிசை வீட்டின் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். பின்னர் காய்ந்த துணிகளை பர்வீன் எடுத்தபோது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
 க
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர், மனைவி பர்வீனை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. தாய், தந்தை மின்சாரம் பாய்ந்து துடித்ததை பார்த்த 2 குழந்தைகளும் பெற்றோர்களை கட்டிப்பிடித்தபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.