சுஷ்மிதா சென்னுடன் நிச்சியமாக திருமணம் நடைபெறும்: முன்னாள் ஐபிஎல் தலைவர் ட்விட்டரில் தகவல்!



சுஷ்மிதா சென்னுடன் தனது திருமணம் நிச்சியமாக ஒருநாள் நடைபெறும் என முன்னாள் ஐபிஎல் போட்டிகளின் தலைவர் லலித் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பிரபலமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல்-லின் தலைவராகவும், கடந்த 2005ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராகவும் இருந்த லலித் மோடி, வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறி 2010 ஆம் ஆண்டு முதல் லண்டலில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், லலித் மோடி சமீபத்தில் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில், குடும்பங்களுடன் மாலைத்தீவு மற்றும் சார்டினியா போன்ற சுறுசுறுப்பான உலகளாவிய சுற்றுப்பயணம் நிறைவடைந்து லண்டனுக்கு திரும்பி வந்தேன் எனத் தெரிவித்து இருந்தார்.

அத்துடன் இவற்றில் என் பெட்டர்ஹாஃப் சுஷ்மிதாவை குறிப்பிடவில்லை, இறுதியாக வாழ்வின் புதிய தொடக்கம் என தெரிவித்து, சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

சிறிது நேரத்தில் அதன் தொடர்ச்சி பதிவாக பதிவிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், தெளிவுக்காக எனத் தெரிவித்து, எனக்கும் சுஷ்மிதா சென்னுக்கும் திருமணமாகவில்லை, ஒருவரையொருவர் டேட்டிங் செய்கிறோம், ஆனால் அதுவும் ஒரு நாள் நடக்கும். எனத் தெரிவித்து உள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: இந்தியாவில் கணக்கை தொடங்கியது குரங்கம்மை பாதிப்பு: கண்காணிப்பு தீவிரம்

லலித் மோடியின் பதிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் ரீட்வீட்களைப் பெற்றது குறிப்பிடதக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.