“எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆனதை தமிழகமே கொண்டாடுகிறது" – கோவையில் வேலுமணி

அதிமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை வந்தார். அவருக்கு அதிமுக-வினர் விமான நிலையம் முதல் கட்சி அலுவலகம் வரை உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகு எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

வேலுமணி

அப்போது அவர், “தமிழ்நாட்டு மக்களே ஆவலுடன் நடக்க வேண்டும் என எதிர்பார்த்தது நடந்துவிட்டது. எடப்பாடியார் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தமிழகமே கொண்டாடுகிறது. அதிமுக மீண்டும் வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

கடந்த ஓராண்டாக கோவையில் எந்த வேலையும் நடக்கவில்லை. மக்கள் எதிர்பார்க்கும் மக்களாட்சி அமைய, எடப்பாடி அண்ணன் முதல்வராக வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அண்ணன் எடப்பாடியாரை பொதுச்செயலாளராக்க அரும்பாடுபட்டு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

எடப்பாடி பழனிசாமி

கடந்த ஒரு மாதமாக பத்திரிகை ஊடகங்களில் வேறு எந்த செய்தியும் இல்லை. எடப்பாடியார் பற்றிய செய்தி மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. எடப்பாடியார் மீண்டும் முதல்வராக உள்ளதை இந்த எழுச்சி உறுதி செய்கிறது.

நான்கரை ஆண்டுகாலம் அருமையாக ஆட்சி செய்து, அம்மா கொண்டுவர வேண்டும் என்று நினைத்தத் திட்டங்களை எல்லாம் எடப்பாடியார் நிறைவேற்றினார். நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பெறும். வருகின்ற தேர்தல்களில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி உறுதி.

வேலுமணி

எப்பவும் போல மூத்த நிர்வாகிகளுடன் ஒற்றுமையாக இணைந்து பயணிப்போம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.