திறக்கப்பட்ட ஒரே மாதத்தில் 3 பேர் பலி – தொடரும் கோவை மேம்பாலம் சர்ச்சை

கோவை திருச்சி சாலையில் ரூ.253 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டே வாரங்களில் வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.

கோவை திருச்சி சாலை மேம்பாலம்

இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், பேரிகார்டை போட்டு, மேம்பாலத்தின் மீது வேகத்தடை அமைத்தனர்.

கிட்டத்தட்ட 8 இடங்களில் வேகத்தடை அமைத்து, கடந்த வாரம் முதல் மேம்பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இதனிடையே நேற்று நடந்த விபத்தில் மீண்டும் ஒரு ஆண் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர்.

மேம்பாலம்

இது குறித்து கோவை மக்கள் பல்வேறு கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். “சில வாகன ஓட்டிகள் வேகமாக வருகிறார்கள், பாலத்தைத் திட்டமிட்டு கட்டவில்லை. வேகத்தடைக்கு பதில் வேறு திட்டத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும்.” என்று கூறி வருகின்றனர்.

முக்கியமாக, “மேம்பாத்தின் இரு புறமும், இரும்பு கம்பியை கொண்டு தடுப்பு சுவர் போல அமைத்து விபத்தைத் தவிர்க்கலாம்.” என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், விபத்து அதிகம் நடக்கும் மேம்பாலத்தின் மீதுள்ள வளைவில் மணல் மூட்டைகள் மற்றும் பேரிகார்டுகளை அதிகாரிகள் வைத்துள்ளனர்.

இரும்பு தடுப்பு

விபத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக, விரைவில் இரும்பு கம்பியை தடுப்பு சுவராக எழுப்பவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.