தூக்கத்திலேயே உயிர் போகணும், அதான் ஆசைன்னு சொன்னாரு: பிரதாப் போத்தன் குறித்து கலங்கிய நடிகை கனிகா


மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் உடலை காண வந்த நடிகை கனிகா உருக்கத்துடன் பேசினார்.

இன்று காலமான நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதாப் போத்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை கனிகா ஊடகத்திடம் கூறும்போது,

‘பிரதாப் போத்தன் சார், மிகப்பெரிய இயக்குனர். நல்ல நண்பர். மலையாளத்தில் அவருடன் இரண்டு, மூன்று படங்களில் நடித்துள்ளேன்.

இப்போது மலையாளி நடிகர்கள் சங்கம் சார்பாக அவரை பார்க்க வந்தேன். அவரை பார்க்கும் போது தெரிந்தது, மிகவும் நிம்மதியாக அவரது முகம் இருக்கிறது.

Pratap Pothen

எனக்கு இப்போவும் நினைவிருக்கும் விடயம் என்னவென்றால், அவர் ஒருமுறை என்னிடம் கூறினார், இறப்பு என்று ஒன்று வந்தால் எனக்கு தூக்கத்திலேயே உயிர் போக வேண்டும்.

அது தான் என் ஆசைன்னு அவர் சொன்னார்.

அவர் சொன்னபடியே தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடைய ஆத்மா சாந்தியடைய நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். We miss you sir’ என தெரிவித்துள்ளார்.     

Pratap Pothen/Kaniha



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.