சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய வினா குறித்து விசாரணை நடத்தப்படும்: பல்கலைகழக நிர்வாகம் அறிவிப்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய வினா குறித்து விசாரணை நடத்தப்படும் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை அனுப்பியுள்ளது. சர்சைக்குரிய வினா குறித்து பல்கலைக்கழகத்துக்கு எவ்வித உள்நோக்கமோ நேரடியான தொடர்போ இல்லை என நிர்வாகம் பதிலளித்துள்ளது. சர்சைக்குரிய வினாவால் மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருப்பின் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்சைக்குரிய கேள்விகள் இடம்பெறாதவாறு வினாத்தாள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.