ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையை விட்டு வெளியேற தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சராக இருந்த , அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலகி பாதுகாப்பான இடத்தில் தங்கி உள்ளனர். அவர்களின் மற்றொரு சகோதரர், கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் தப்பி சென்று அதிபர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகவும், தடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

latest tamil news

இதனை விசாரித்த நீதிமன்றம், மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் வரும் 28 ம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியேற இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.