நீட் தேர்வில் பாடங்கள் கடினம் – கடிதம் எழுதிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு

அரியலூரில் நீட் தேர்வு காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் நடராஜன் – உமா தம்பதியர். இவர்களுக்கு நிஷாந்தி என்ற மகளும் நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், மகள் நிஷாந்தி கடந்தாண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வில் 529.35 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
image
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் இருக்கும் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை சமையலறைக்குச் சென்ற தாய் உமா, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து குடும்பமே சோகத்தில் ஆழ்ந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
image
இதையடுத்து அரியலூர் டிஎஸ்.பி வெங்கடேசன் கூறிய போது… மாணவி நிஷாந்தி ஆங்கிலத்தில் தனது குடும்பத்தினருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது அப்பா அரியலூரிலே வந்து இருக்க வேண்டும் எனவும் நீட்டில் வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாவும் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.