ரயிலின் இருபுறமும் பற்றி எரிந்த காட்டுத் தீயால் பீதியடைந்த பயணிகள்..

ஸ்பெயினின் வடமேற்கு மாகாணமான ஜமோராவில் ரயில் ஒன்று, இரு புறமும் பற்றி எரியும் காட்டுத் தீயால் சூழப்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

மாட்ரிட்டில் இருந்து பெரோல் நோக்கிச் சென்ற அந்த ரயில் Zamora-Sanabria பகுதியில் சென்ற போது தண்டவாளத்தின் அருகில் உள்ள புதர்கள் தீப்பற்றி எரிந்ததால் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

ரயிலின் உள்ளே இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக பார்த்த போது, இரு புறமும் ஆரஞ்சு நிறத்தில் தீப்பிழம்புகள் எழுந்ததைக் கண்டு அச்சமடைந்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

பின்னர் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.