சட்டவிரோத கடன் செயலி 3 சீனர்களுக்கு நோட்டீஸ்| Dinamalar

புவனேஸ்வர் : சீன நாட்டைச் சேர்ந்த மூவருக்கு எதிராக, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ எனப்படும் தேடப்படும் குற்றவாளிகள் அறிக்கையை, குடியேற்றத் துறை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த மூவர் மீது, இந்தியாவில் சட்டவிரோத கடன் செயலியை இயக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.ஜூலை மாத துவக்கத்தில் இதே குற்றச்சாட்டில், மற்றொரு சீன நாட்டவர் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், சட்டவிரோத கடன் செயலிகளை இயக்கி வருகின்றனர். இந்தச் செயலியால், நாடு முழுதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, ஒடிசா பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் சில நாடுகளிலும் இவர்கள் இதே போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.