பதிவு செய்யுமாறு இந்தியாவில் உள்ள இலங்கை மாணவர்களிடம் கோரிக்கை

சென்னையில் உள்ள இலங்கையின் துணை தூதரகமும் , மும்பையில் உள்ள இலங்கை துணைத் தூதரகமும் இணைந்து தற்போது இந்தியாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் விபரங்களைச் சேகரிக்கவும், தொடர்புடைய தரவுத்தளங்களைப் புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளன.

இதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கான உரிய பதவிகள் அவர்களை சென்றடையவும், அவர்களுக்கு தேவைப்படும் போது உதவிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஆகவே குறித்த மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கிணங்க இணைய இணைப்புகளைப் பயன்படுத்தி தங்களைப் பதிவுசெய்யுமாறு இலங்கை மாணவர்களை இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்க்காக பின்வரும் இணையதளங்களில் மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம் :இதற்கான இணைய தள விபரம் 

புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் மும்பையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம்

https://www.slhcindia.org/

சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயத்திற்கான பதிவு

https://www.sldhcchennai.org/

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.