போதையில் மட்டையான பாஜக பிரமுகர் – தூக்கிச் சென்ற தொண்டர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் மது போதையில் நடக்க முடியாமல் இருந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவரை பாஜகவினர் தூக்கி சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அசோக்குமார். பாஜகவை சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 17ம் தேதி பல்லடம் ராயர்பாளையத்தில் பாஜவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதப்பூர் பஞ்சாயத்து தலைவருமான அசோக்குமார் கலந்து கொண்டார்.

image
கூட்டத்தை முடித்து கட்சித் தொண்டர்களுடன் சென்ற மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர் நடக்கமுடியாமல் இருந்துள்ளார். உணவருந்த நண்பர்கள் அழைத்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் எழுந்து செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள் நடக்க முடியாத அவரை தூக்கி செல்கின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வேகமாக பரவி வருகின்றது.

இதையும் படிக்கலாம்: கள்ளக்குறிச்சி விவகாரம்: தொடரும் கைது நடவடிக்கை; யூடியூப் சேனல்களை முடக்கவும் திட்டம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.