மாணவி 12ஆம் தேதி இரவே மாடிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறுகின்றனர். இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில்  ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

sda

வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வன்முறை காரணமாக இந்த பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவி பள்ளியில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 12ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி படிப்பு அறையில் இருந்து வெளியே வந்த காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவி ஸ்ரீமதி 13ஆம் தேதி காலை பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. மாணவி இரவே உயிரிழந்தாரா? அல்லது காலையில் உயிரிழந்தாரா? என குழப்பம் நீடித்தது.
 
newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.