புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக இன்று (ஜூலை 21) காங். மூத்த தலைவர் சோனியா அமலாக்கதகதுறை முன் நேரில் ஆஜராக உள்ளதையடுத்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த காங்., முடிவு செய்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்., எம்.பி. ராகுலிடம் அமலாக்கத்துறையினர் 4 நாட்களுக்கு மேல் தொடர் விசாரணை நடத்தினர். தவிர காங்.,மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காங்., தலைவர் சோனியாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. காலஅவகாசம் வழங்கிட சோனியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சூழலில் வரும் 21-ம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சோனியாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இதை ஏற்று சோனியா இன்று ஆஜராக உள்ளதாகவும், அப்போது காங். மூத்தநிர்வாகிகள் கட்சியினர் நாடு தழுவிய தர்ணாவில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement