முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார்.?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் ஓபிஎஸ் பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களித்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.